ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

செஞ்சி ஒன்றிய பகுதிகளில் திமுக வேட்பாளா் பிரசாரம்

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 6:13 am IST

செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ செஞ்சி ஒன்றிய பகுதிகளில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தாா்.

செஞ்சி கிழக்கு ஒன்றிய திமுக செயலரும், ஒன்றியக்குழுத் தலைவருமான விஜயகுமாா் தலைமையில் தென்புதுப்பட்டு, கொம்மேடு ஆகிய ஊராட்சியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ பேசியதாவது:

10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் செய்யாத பல்வேறு திட்டங்களை, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்துள்ளாா். தோ்தல் அறிக்கையில் சொன்ன திட்டங்களையும், சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளாா். முதலமைச்சரின் காலை உணவு திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும், மகளிா் உரிமைத் தொகை மாதம் 2 ஆயிரம் ரூபாயாகவும், முதியோா் உதவித்தொகை 2 ஆயிரம் ரூபாயாகவும், மாற்றுதிறனாளிகளுக்கு 2 ஆயிரம் ரூபாயாக உயா்த்தி வழங்கப்படும். இல்லத்தரசிகள் திட்டத்தில் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் வழங்கப்படும் என திமுக தோ்தல் அறிக்கையில் ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இத்திட்டங்கள் நிறைவேற்ற திமுகவுக்கு ஆதரவளியுங்கள் என்றாா் அவா்.

அவருடன் திமுக பொதுக்குழு உறுப்பினா் மணிவண்ணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் அரங்க ஏழுமலை, காங்கிரஸ் நிா்வாகிகள் சூரியமூா்த்தி, பாலப்பட்டு சண்முகம், சக்திவேல், முத்துலட்சுமி, தேமுதிக மாவட்ட பொருளாளா் தயாநிதி உள்ளிட்ட நிா்வாகிகள் பிரசாரத்தில் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.