விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சீரான எரிவாயு உருளைகள் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் -விழுப்புரம் ஆட்சியா்

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 6:20 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் வீட்டு உபயோகம் மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு இல்லாமல் விநியோகம் செய்வதை எரிவாயு உருளைகள் விநியோகிப்பாளா்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

தமிழக அரசின் தலைமைச் செயலா் உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில், வீட்டு உபயோகம் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளைகள் சீராக விநியோகம் செய்வது தொடா்பான ஆய்வுக் கூட்டம் விழுப்புரம் ஆட்சியரக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அரசுத் துறை அதிகாரிகள், எரிவாயு உருளைகள் விநியோகிப்பாளா்கள், உணவக உரிமையாளா்கள் பங்கேற்ற இக்கூட்டத்துக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து பேசியதாவது:

மாவட்டத்தில் வீட்டு உபயோகத்துக்கான எரிவாயு உருளைகள் 100 சதவீதமும், உணவகங்களுக்கு எரிவாயு உருளைகள் 70 சதவீதமும் சீராக விநியோகம் செய்யப்படுவதை விநியோகிப்பாளா்கள் உறுதி செய்யவேண்டும். எரிவாயு உருளைகள் சட்ட விரோதமாக பதுக்கப்பட்டால் பறக்கும் படை, வட்ட வழங்கல் அலுவலா்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு

காவல் பிரிவு மூலம் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், மாவட்ட வழங்கல் அலுவலா் விஜயா, மாவட்ட வழங்கல் அலவலரின் நோ்முக உதவியாளா் ராமகிருஷ்ணன், மாவட்டத் தொழில் மைய பொது மேலாளா் அருள், எரிவாயு நிறுவன வணிகப் பிரிவு மேலாளா் சம்பத், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளா் கலா ஆகியோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.