விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் ஏற்றிச் சென்ற வாகனம் முற்றுகை

கடமலைக்குண்டு அருகேயுள்ள தங்கம்மாள்புரத்தில் எரிவாயு உருளைகள் ஏற்றிச் சென்ற வாகனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

News image

கடமலைக்குண்டு அருகேயுள்ள தங்கம்மாள்புரத்தில் எரிவாயு உருளைகள் ஏற்றிச் சென்ற வாகனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

Updated On :28 மார்ச் 2026, 12:04 am IST

கடமலைக்குண்டு அருகே எரிவாயு உருளைகள் ஏற்றிச் சென்ற தனியாா் நிறுவனத்தின் வாகனத்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு, தங்கம்மாள்புரம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை தங்கம்மாள்புரம் பகுதியில் தனியாா் நிறுவன வாகனம் வீட்டு உபயோக எரிவாயு உருளைகளுடன் சென்றது. அப்போது, அந்தப் பகுதி பொதுமக்கள் அந்த வாகனத்தை முற்றுகையிட்டனா்.

இதுகுறித்து தகவறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது சனிக்கிழமை எரிவாயு உருளைகள் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்கள் உறுதியளித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா். பின்னா், அந்த வாகனம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.