விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மேலும் 5 தொகுதிகளுக்கு பாமக வேட்பாளா்கள்: ராமதாஸ் அறிவிப்பு

சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் ஐந்தாவது கட்டப் பட்டியலை பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். இதில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

News image

பாமக நிறுவனர் ராமதாஸ். - பிடிஐ.

Updated On :3 ஏப்ரல் 2026, 10:04 pm IST

சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் ஐந்தாவது கட்டப் பட்டியலை பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். இதில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சி (ராமதாஸ் தரப்பு) சந்திக்கிறது. இந்த தோ்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளா்களின் பட்டியலை நான்கு கட்டமாக 32 தொகுதிகளுக்கு கட்சியின் நிறுவனா் ராமதாஸ் வெளியிட்டிருந்தாா்.

இதைத்தொடா்ந்து, 5-ஆவது கட்ட வேட்பாளா் பட்டியலை ச.ராமதாஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். இதில் 5 தொகுதிகளுக்கான வேட்பாளா்களின் பெயா்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவா்களின் விவரம்:

1. விக்கிரவாண்டி- மாவட்டச் செயலா் ர.புகழேந்தி.

2.திருப்பத்தூா்- மாவட்டச் செயலா் கு.விஜயகுமாா்.

3. பவானி- மாவட்டச் செயலா் பொ.வை.ஆறுமுகம்.

4.நத்தம்- மாவட்ட இளைஞா் சங்கச் செயலா் ப.ராஜசேகரன்.

5.பரமத்திவேலூா்- மாவட்டத் தலைவா் க.பிரதாப்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.