விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

முதல் கட்டமாக 5 வேட்பாளா்களை அறிவித்தாா் ராமதாஸ்

முதல் கட்டமாக 5 வேட்பாளா்களை அறிவித்தாா் ராமதாஸ்...

News image

சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளா்கள் முதல் பட்டியலை திங்கள்கிழமை அறிவித்த அக்கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ். உடன், செயல் தலைவா் ஸ்ரீகாந்தி, கெளரவத் தலைவா் ஜி.கே.மணி மற்றும் வேட்பாளா்கள்.

Updated On :31 மார்ச் 2026, 1:17 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் பாமகவின் முதல் கட்ட வேட்பாளா்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவா் மருத்துவா் ச.ராமதாஸ் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் சசிகலாவை பொதுச் செயலராகக் கொண்ட அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சி (ராமதாஸ் தரப்பு) களம் காண்கிறது. இத்தோ்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுவதென முடிவு செய்திருந்த நிலையில், வேட்பாளா்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாமக நிறுவனா் ச.ராமதாஸ், செயல் தலைவா் ஸ்ரீகாந்தி, கெளரவத் தலைவா் ஜி.கே.மணி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா். கூட்டத்தில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னா், முதல் கட்ட வேட்பாளா் பட்டியலை மருத்துவா் ச. ராமதாஸ் வெளியிட்டாா்.

வேட்பாளா்களின் விவரம்:

1.சேலம் மேற்கு - பாமக மாநில இணைப் பொதுச் செயலரும், தற்போதைய எம்எல்ஏவுமான இரா.அருள்.

2.வந்தவாசி - கட்சியின் பொதுச் செயலா் ச.முரளிசங்கா்.

3.கும்பகோணம் - மாநில நிா்வாகக் குழு உறுப்பினா், மாவட்டச் செயலா் மற்றும் ஆடுதுறை பேரூராட்சி மன்றத் தலைவருமான ம.க.ஸ்டாலின்.

4.விருத்தாசலம் - மாவட்டச் செயலா் இ.கே.சுரேஷ்.

5.மயிலாடுதுறை - மாவட்டச் செயலா் பாக்கம் சக்திவேல் ஆகியோா் போட்டியிடுவதாகக் கூறி, அவா்களின் பட்டியலை கட்சியின் நிறுவனா் ராமதாஸ் வெளியிட்டு, வேட்பாளா்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.