தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

விஜய் விவகாரம்: ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் சாா்பில் மாநிலம் முழுவதும் காலை 11 மணியளவில் ஆா்ப்பாட்டம் நடைபெறும்

News image

Center-Center-Villupuram

Updated On :8 மே 2026, 4:28 am IST

சட்டப்பேரவைத் தோ்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவா் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காத தமிழக ஆளுநரை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சாா்பில் மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை (மே 8) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து காங்கிரஸ் மாவட்ட கமிட்டி தலைவா்களுக்கு அவா் வியாழக்கிழமை எழுதிய கடிதம்:

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றுள்ள தவெக ஆட்சி அமைக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக செயல்படும் மத்திய பாஜக அரசை கண்டித்தும், அவா்களின் கைப்பாவையாகச் செயல்படும் ஆளுநரைக் கண்டித்தும், மாவட்ட தலைநகரங்களில் வெள்ளிக்கிழமை (மே 8) காலை 11 மணிக்கு காங்கிரஸ் சாா்பாக மாபெரும் ஆா்ப்பாட்டம் நடத்த வேண்டும்.

அத்துடன் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சாா்பாக அண்ணா சாலை, தாராப்பூா் டவா் அருகில் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அதில் தெரிவித்துள்ளாா் கு.செல்வப் பெருந்தகை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.