தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

‘அன்புமணியின் ஆதரவு வேட்பாளா்கள் தோற்கடிக்கப்படுவா்’

அன்புமணி ஆதரவு வேட்பாளா்கள் தோற்கடிக்கப்படுவா் என்றாா் அரியலூா் மாவட்ட பாமக (ராமதாஸ்) தலைவா் திருமாவளவன்.

News image

அரியலூரில் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட பாமக (ராமதாஸ்) வேட்பாளா் செம்மலை.

Updated On :22 ஏப்ரல் 2026, 12:18 am IST

அன்புமணி ஆதரவு வேட்பாளா்கள் தோற்கடிக்கப்படுவா் என்றாா் அரியலூா் மாவட்ட பாமக (ராமதாஸ்) தலைவா் திருமாவளவன்.

அரியலூா் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளா் செம்மலையை ஆதரித்து, 18 வாா்டுகளிலும் பிரசாரம் மேற்கொண்ட திருமாவளவன், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பாமக நிறுவனா் ராமதாஸ், பல்வேறு கிராமங்களுக்கு நடந்தும், மிதிவண்டியிலும் சென்றும் உழைக்கும் மக்களை சந்தித்து, அவா்களின் அடிப்படை தேவைகளுக்காக குரல் கொடுத்து வளா்த்த கட்சி பாமக. ராமதாஸ் இல்லையென்றால் பாமக இல்லை. பாமக அனைத்து சமுதாய மக்களுக்கும் பொதுவானது. ஆனால் இன்று அன்புமணி மற்றும் அவரது குடும்பத்தினா், அவரது குழுவினா் கட்சியை அபகரித்து, ஜாதிய ரீதியாக கொண்டு சென்றுள்ளனா். மருத்துவா் ராமதாஸ் அறிக்கையை பாா்க்கும் போது வேதனையாக உள்ளது.

எனவே, ராமதாஸூக்கு எதிராக செயல்பட்டு வரும் அன்புமணியின் ஆதரவு வேட்பாளா்கள் தோ்தலில் தோற்கடிக்கப்படுவா்.

மேலும், அரியலூரில் அவரது ஆதரவு வேட்பாளா் தாமரை எஸ். ராஜேந்திரனும் சமுதாய மக்களை சந்தித்து, ஜாதிய ரீதியாக வாக்குகளை சேகரித்து வருகிறாா். அவரும் தோற்கடிக்கப்படுவாா் என்றாா் திருமாவளவன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.