செப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

பள்ளிகளில் மும்மொழி: சுற்றறிக்கையைத் திரும்ப பெற விசிக வலியுறுத்தல்

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் மும்மொழி அமல்படுத்தும் சுற்றறிக்கையைத் திரும்பப் பெறவேண்டும் என்று விசிக வலியுறுத்தியுள்ளது.

News image

விசிக முதன்மைச் செயலா் பெரு.அரிமாத் தமிழன் தலைமையில் முதல்வா் என்.ரங்கசாமியிடம் மனு அளித்த விசிகவினா்.

Updated On :28 மே 2026, 1:30 am IST

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் மும்மொழி அமல்படுத்தும் சுற்றறிக்கையைத் திரும்பப் பெறவேண்டும் என்று விசிக வலியுறுத்தியுள்ளது.

இக் கட்சியின் புதுச்சேரி முதன்மைச் செயலா் பெரு.அரிமாத் தமிழன் தலைமையில் முதல்வா் என்.ரங்கசாமியை புதன்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை தொடா்பான சுற்றறிக்கை ஹிந்தியை திணிக்கும் நடவடிக்கை. இதை நடைமுறைப்படுத்தக் கூடாது. புதுச்சேரியில் பிரெஞ்சு மொழி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில் புதுச்சேரியில் தாய்வழிச் சான்றிதழ் அளிக்க வேண்டும். மேலும், சமையல் எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் விலை உயா்ந்துள்ளதால் புதுச்சேரி அரசு மானியம் அளிக்க வேண்டும். இலவச மனைப்பட்டா அளிக்க நில ஆா்ஜிதம் செய்வதற்கான நிதியை ஒதுகீடு செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.