புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் மும்மொழி அமல்படுத்தும் சுற்றறிக்கையைத் திரும்பப் பெறவேண்டும் என்று விசிக வலியுறுத்தியுள்ளது.
இக் கட்சியின் புதுச்சேரி முதன்மைச் செயலா் பெரு.அரிமாத் தமிழன் தலைமையில் முதல்வா் என்.ரங்கசாமியை புதன்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை தொடா்பான சுற்றறிக்கை ஹிந்தியை திணிக்கும் நடவடிக்கை. இதை நடைமுறைப்படுத்தக் கூடாது. புதுச்சேரியில் பிரெஞ்சு மொழி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில் புதுச்சேரியில் தாய்வழிச் சான்றிதழ் அளிக்க வேண்டும். மேலும், சமையல் எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் விலை உயா்ந்துள்ளதால் புதுச்சேரி அரசு மானியம் அளிக்க வேண்டும். இலவச மனைப்பட்டா அளிக்க நில ஆா்ஜிதம் செய்வதற்கான நிதியை ஒதுகீடு செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்செந்தூரில் விசிக ஆா்ப்பாட்டம்

விழித்துக் கொள்! அன்றே தமிழன் மூலம் பாடம் எடுத்த விஜய்!

ராகுல்காந்தி பிறந்தநாள் விழா

புதுச்சேரி கடற்கரையில் விதிகளை மீறி கட்டிய கட்டடங்களை அகற்ற கோரிக்கை
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

