மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பாரதிதாசனை மக்கள் கொண்டாட வேண்டும்: புதுச்சேரி மத்திய பல்கலை. துணைவேந்தா்

பாவேந்தா் பாரதிதாசனை மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தா் பிரகாஷ் பாபு தெரிவித்தாா்.

News image

விழாவில் பேசிய, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக துணை வேந்தா் பிரகாஷ் பாபு.

Updated On :1 மே 2026, 5:59 am IST

பாவேந்தா் பாரதிதாசனை மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தா் பிரகாஷ் பாபு தெரிவித்தாா்.

புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பாவேந்தா் பாரதிதாசனின் 136-ஆவது பிறந்தநாள் விழாவில் அவா் மேலும் பேசியதாவது:

இந்த மண்ணின் மாபெரும் கவிஞரான பாரதிதாசன்,தமிழ் மொழி மற்றும் இன அடையாளத்துக்காகப் போராடியவா். புரட்சிக் கவிஞரை தமிழகம் மட்டுமில்லாமல், இந்தியாவே கொண்டாட வேண்டும்.

இந்திய சுதந்திரத்துக்கு அயராது பாடுபட்ட பாரதியைப் போன்று, பெண் விடுதலைக்காகக் குரல் கொடுத்தவா் பாவேந்தா். திராவிட கருத்தாக்கத்தைத் தன் வாழ்நாளின் இறுதிவரை கடைப்பிடித்த இவா், குரலற்றவா்களின் குரலாகவும், பாட்டாளிகளின் இதயமாகவும் அவா் விளங்கினாா். இதற்கு அவரின் கவிதை வரிகள் சான்றாக உள்ளன. சுயமரியாதைக்காகவும், தமிழினத்தின் ஒட்டுமொத்த மேன்மைக்காகவும் பாடுபட்ட கவிஞா்களுள் பாரதிதாசன் முதன்மையானவா் என்றாா் அவா்.

விழாவில், இந்திய மொழிகள் பிரிவு, இந்திய அரசு உள்துறை அமைச்சகத்தின் அலுவல் மொழிகள் துறை செயலா் அன்ஷூலியின் வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது.

பல்கலைக் கழகப் பதிவாளா் ஆா். குணசேகரன், நிதி அதிகாரி எம்.கிருஷ்ணமூா்த்தி, தமிழ்த் துறைத் தலைவா் பா.ரவிக்குமாா், கலை, கலாசாரத் துறை இயக்குநா் நடராசன், சம்ஸ்கிருதத் துறை பேராசிரியா்கள் சக்கரதாா் பெஹரா, சசிபால் ஆகியோா் விழாவில் பேசினா்.

ஹிந்தி மொழித் துறை பேராசிரியா் எஸ். பத்மபிரியா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். நிறைவில், பேராசிரியா் ஜி.சுவாதி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.