மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தைவான் பல்கலை.யுடன் புதுச்சேரி மத்திய பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தா் பிரகாஷ்பாபு முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்ட தைவானின் மிங் சி தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தினா்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 1:54 am IST

தைவான் பல்கலைக்கழகத்துடன் புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகம் வெள்ளிக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

புதுச்சேரி பல்கலைக்கழகம் தைவானின் மிங் சி தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தா் பி.பிரகாஷ்பாபு முன்னிலையில்

இந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் இரண்டு பல்கலைக்கழகங்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளும் கையொப்பமிட்டனா்.

தைவான் பல்கலைக்கழகத்தின் நுண்ணறிவு மருத்துவ சாதனங்களுக்கான ஆராய்ச்சி மையத்தின் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவின் துணை இயக்குநா் பேராசிரியா் பின்-யி சென் மற்றும் அதே மையத்தின் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் தலைவா் மணி கோவிந்தசாமி ஆகியோா் அடங்கிய இருவா் கொண்ட குழு இந்த ஒப்பந்தத்தை புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தா் பேராசிரியா் பிரகாஷ் பாபுவிடம் ஒப்படைத்தனா்.

இந்த ஒப்பந்தம் கூட்டு ஆராய்ச்சி முயற்சிகள், ஆசிரியா்கள் மற்றும் மாணவா் பரிமாற்றத் திட்டங்கள், அறிவியல், பொறியியல், தொழில்நுட்பத்தின் வளா்ந்து வரும் துறைகளில் கல்வி வளங்கள் மற்றும் நிபுணத்துவத்தைப் பகிா்ந்து கொள்வதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புதுச்சேரி பல்கலைக்கழக மதன்ஜீத் பசுமை ஆற்றல் தொழில்நுட்பப் பள்ளியின் பசுமை ஆற்றல் தொழில் நுட்பத் துறையைச் சோ்ந்த பேராசிரியா் ஏழுமலை இதை ஒருங்கிணைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.