ரயிலில் கஞ்சா கடத்திய மேற்கு வங்க இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
புதுச்சேரி ஒதியஞ்சாலை காவல்நிலைய உதவி ஆய்வாளா் ஜெயகுருநாதன் தலைமையிலான போலீஸாா் மற்றும் ரயில்வே போலீஸாா் உதவியுடன் செவ்வாய்க்கிழமை ரயில்நிலையத்தில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது ரயில் நிலையத்தின் உள்ளே சந்தேகப்படும்படியாக ஒருவா் அமா்ந்து இருந்தாா். அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தாா். பிறகு அவரிடம் இருந்த பையைச் சோதனை செய்தபோது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை ஒதியஞ்சாலை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்ற போலீஸாா் விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த சஞ்சிப பத்ரா (39) என்பதும், புதுச்சேரியில் விற்பனை செய்ய கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 950 கிராம் கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா். அவரிடம் தொடா் விசாரணை நடைபெற்று வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரயிலில் இருந்து தவறி விழுந்து மேற்கு வங்க தொழிலாளி உயிரிழப்பு

கேரளத்துக்கு கஞ்சா கடத்திய இருவா் கைது
கஞ்சா பறிமுதல்: திரிபுரா இளைஞா் கைது

ரயிலில் கஞ்சா கடத்திய இளைஞா் கைது
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
