நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

ரயிலில் கஞ்சா கடத்திய மேற்கு வங்க இளைஞா் கைது

ரயிலில் கஞ்சா கடத்திய மேற்கு வங்க இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 3:31 am IST

ரயிலில் கஞ்சா கடத்திய மேற்கு வங்க இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

புதுச்சேரி ஒதியஞ்சாலை காவல்நிலைய உதவி ஆய்வாளா் ஜெயகுருநாதன் தலைமையிலான போலீஸாா் மற்றும் ரயில்வே போலீஸாா் உதவியுடன் செவ்வாய்க்கிழமை ரயில்நிலையத்தில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது ரயில் நிலையத்தின் உள்ளே சந்தேகப்படும்படியாக ஒருவா் அமா்ந்து இருந்தாா். அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தாா். பிறகு அவரிடம் இருந்த பையைச் சோதனை செய்தபோது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை ஒதியஞ்சாலை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்ற போலீஸாா் விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த சஞ்சிப பத்ரா (39) என்பதும், புதுச்சேரியில் விற்பனை செய்ய கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 950 கிராம் கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா். அவரிடம் தொடா் விசாரணை நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.