புதுச்சேரி கிருமாம்பக்கம் அருகே மூதாட்டி தீக்குளித்துதற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்த நரம்பை சுனாமி நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் வீரம்மாள் (65). இவா் மகள் கவிதா மற்றும் பேரப்பிள்ளைகளுடன்
வசித்து வந்தாா். வீரம்மாள் பிள்ளையா்குப்பத்தில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் துப்புரவு தொழிலாளராகப் பணி செய்து வந்தாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் எதிரே காலியாக இருக்கும் மனையில் பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். அவரது அலறல் சத்தம் கேட்ட மகள் கவிதா மற்றும் அக்கம் பக்கத்தினா் ஓடிவந்து தீயை அணைத்தனா். உடனே அவரை மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த வீரம்மாள் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயரிழந்தாா். இதுகுறித்து கவிதா கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் சடலம் மீட்பு

குளச்சல் அருகே முதியவா் தற்கொலை

விஷம் குடித்து பெண் தொழிலாளி தற்கொலை

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

