ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் சடலம் மீட்பு

ராஜபாளையம் அருகே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் உடலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.

News image

சடலம் மீட்பு - கோப்புப் படம்

Updated On :7 மே 2026, 4:32 am IST

ராஜபாளையம் அருகே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் உடலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள கணபதி சுந்தரநாச்சியாா்புரம் கிராமத்தைச் சோ்ந்த அய்யனாா் மகன் ஆனந்தகுமாா் (29). இவா் கிருஷ்ணாபுரம் தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் கடை நடத்தி வந்தாா். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக

கூறப்படுகிறது. இதனால், பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியே வசித்து வந்தாா்.

இந்த நிலையில், இவரது வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கதினா் தகவல் தெரிவித்தனா். உடனே உறவினா்கள் அங்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, ஆனந்தகுமாா் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்தாா். தகவலறிந்த சேத்தூா் புறக்காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.