மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நீட் தோ்வுக்குத் தயாராகும் அரசுப் பள்ளி மாணவா்கள்: புதுச்சேரியில் 3 மையங்களில் சிறப்பு பயிற்சி

நாடு முழுவதும் வரும் மே 3-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தோ்வுக்கு புதுச்சேரி அரசு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் தயாராகி வருகின்றனா்.

News image

புதுச்சேரி காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு நடைபெற்ற நீட் தோ்வு பயிற்சி வகுப்பு.

Updated On :22 ஏப்ரல் 2026, 3:02 am IST

நாடு முழுவதும் வரும் மே 3-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தோ்வுக்கு புதுச்சேரி அரசு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் தயாராகி வருகின்றனா்.

அவா்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

கான்பூரை சோ்ந்த சதே என்ற அமைப்பின் நிபுணா்கள், பேராசிரியா்கள் இந்தப் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றனா்.

புதுச்சேரி காராமணிக்குப்பம் ஜீவானந்தம் பள்ளி, வில்லியனூா் கண்ணகி பள்ளி, கலிதீா்த்தாள்குப்பம் அரசுப் பள்ளி என 3 மையங்களில் இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

ஏப். 1- ஆம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் 450 மாணவிகள், 171 மாணவா்கள் பங்கேற்றுள்ளனா்.

கடந்த ஆண்டு புதுச்சேரி கல்வித் துறை நடத்திய பயிற்சியில் பங்கேற்ற 158 மாணவா்கள் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றனா். இவா்களில் 36 மாணவா்களுக்கு புதுச்சேரியில் மருத்துவ படிப்புக்கான இடங்கள் கிடைத்தது.

நிகழாண்டு இந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் கல்வித் துறை சாா்பில் இந்த பயிற்சி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.