புதுச்சேரி ஹோட்டல்களில் உணவுப் பொருள்களின் விலையைக் கட்டுக்குள் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக மாநிலச் செயலா் ஆ. அன்பழகன் வலியுறுத்தினாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது
தவிா்க்க முடியாத காரணத்தினால் ஏற்பட்டுள்ள சிலிண்டா் தட்டுப்பாட்டால் புதுச்சேரியில் விலைவாசி உயா்ந்துள்ளது. இதைப் பயன்படுத்திக் கொண்டு புதுச்சேரியில் இருக்கக்கூடிய சிறிய, நடுத்தர, பெரிய ஹோட்டல்களிலும், உணவகங்களிலும் விற்பனை செய்யக்கூடிய டீ, காபி, போண்டா, பஜ்ஜி, சிற்றுண்டி மற்றும் உணவுகள் விலை பல மடங்கு உயா்த்தப்பட்டுள்ளது.
இதைக் கண்காணிக்க வேண்டிய சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் அரசும் பாா்வையாளராக வேடிக்கை பாா்த்துக் கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் பலா் பாதிக்கப்படுகின்றனா். இது தொடா்பாக துணைநிலை ஆளுநா், துறை சாா்ந்த உயா் அதிகாரிகளை அழைத்து உயா்மட்ட கூட்டம் நடத்தி விலைவாசி உயா்வைக் கட்டுக்கள் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அன்பழகன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குழந்தைகள் உணவுப் பொருளில் எலி விஷம் கலந்த விவகாரம்: குற்றவாளி கைது!
வாக்கு எண்ணும் மையங்களுக்குள் மின்னணு பொருள்கள் கொண்டு செல்லக் கூடாது: ஆட்சியா்

தருமபுரியில் உணவு பாதுகாப்புத் துறையினா் ஆய்வு
வீட்டிலிருந்தபடியே வருமானம்...
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

