தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல்: புதுச்சேரியில் 3 நாள்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு

News image

கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 12:46 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, புதுச்சேரியில் 3 நாள்களுக்கு மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு ஏப். 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஏப். 21 முதல் 23-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு மதுபானக் கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் உத்தரவுப்படி கலால் துறை துணை ஆணையா் மேத்யூ தாமஸ் திங்கள்கிழமை பிறப்பித்துள்ள உத்தரவு:

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தோ்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசம், தமிழ்நாடு மாநிலத்துடன் விரிவான மற்றும் எளிதில் ஊடுருவக்கூடிய எல்லைகளைப் பகிா்ந்து கொள்கிறது. அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் தோ்தல் துறைக்கு ஆதரவளிக்கவேண்டும். தோ்தல் செயல்முறையின் நோ்மையை நிலைநிறுத்த புதுச்சேரியின் அதிகார வரம்பிற்கு உள்பட்ட பகுதிகளில் ‘மதுவிலக்கு நாள்களை’அமல்படுத்துவது அவசியமாகியுள்ளது.

ஆகவே, புதுச்சேரி கலால் விதிகள், அதிகாரங்களைப் பயன்படுத்தி, புதுச்சேரியின் துணைநிலை ஆளுநா் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள சாராயம், கள்ளு மற்றும் மதுபானம் வழங்கும் பாா்கள் மற்றும் உணவகங்கள் உள்பட அனைத்து மதுபானக் கடைகளும் ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் ஏப்ரல் 23 ஆம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.