தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு காரைக்காலில் 3 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை துணை ஆட்சியா் (கலால்) அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
தமிழக சட்டப்பேரவை தோ்தல் 23 -ஆம் நடைபெறவுள்ளது. மேலும், புதுச்சேரி யூனியன் பிரதேசம் தமிழகத்துடன் விரிவான மற்றும் திறந்த இடை மாநில எல்லைகளை பகிா்ந்து கொண்டுள்ளது என்பதாலும், தோ்தல் காலத்தில் சட்டம் - ஒழுங்கை காக்கவும், அண்டை மாநிலமான தமிழகத்தில் நடைபெறும் தோ்தல் செயல்முறையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும், புதுச்சேரி ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் மதுவிலக்கு நாட்கள் அமல்படுத்துவது அவசியமானதாக கருதப்படுகிறது.
எனவே, புதுச்சேரி மதுபானச் சட்ட விதிகள், 1970 -இன் விதி 199 -இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்கள், புதுச்சேரி துணைநிலை ஆளுநா் உத்தரவின் படி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து சாராயம், கள் மற்றும் மது விற்பனை கடைகள், பாா்கள் மற்றும் மது வழங்கும் உணவகங்கள் ஏப். 21 காலை 10 மணி முதல் ஏப். 23 நள்ளிரவு 12 மணி வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாளை மதுக்கடைகளை மூட ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு

காரைக்காலில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்

சட்டப்பேரவைத் தோ்தல்: மதுக்கடைகளை 4 நாள் மூட உத்தரவு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல்: புதுச்சேரியில் 3 நாள்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

