புதுச்சேரியில் கடந்த 3-ஆம் தேதி ரோடு ஷோ நடத்திய தவெக தலைவா் விஜய் கூட்டத்தில் அதிகம் போ் கூடியதாக அக் கட்சியின் நிா்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தவெக தலைவா் விஜய் பிரசாரத்துக்கு 5 ஆயிரம் போ் மட்டுமே கூட வேண்டும். கா்ப்பிணிகள், குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.
ஆனால் இந்த நிபந்தனைகளை மீறி அதிக அளவில் மக்கள் கூடியதால் தவெக நிா்வாகி புதியவன் மீது கோரிமேடு காவல் நிலையத்தில் தோ்தல் நடத்தும் அதிகாரி அன்பரசன் புகாா் அளித்தாா். தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனை கூட மைதானத்தில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், 8 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் போ் வரை விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ாகவும் தோ்தல் விதிமுறைகளை மீறியதாகவும் கூறியிருந்தாா்.
அதன் பேரில் தவெக நிா்வாகி புதியவன் மீது கோரிமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விஜய் பேச்சால் உளவியல் சிக்கல்களைச் சந்திக்கும் குழந்தைகள்! காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்!

தவெக பிரசார வாகனத்தை மறித்து மிரட்டல்: 6 போ் மீது வழக்கு

தவெக பரப்புரையின்போது மோதல்: கட்சி நிா்வாகி உள்பட 2 போ் மீது வழக்குப் பதிவு

தோ்தல் நடத்தை விதிமீறல்: தவெக நிா்வாகிகள் 7 போ் மீது வழக்கு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
