தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தவெக பரப்புரையின்போது மோதல்: கட்சி நிா்வாகி உள்பட 2 போ் மீது வழக்குப் பதிவு

திருச்சியில் தமிழக வெற்றிக் கழக தோ்தல் பரப்புரையின்போது ஏற்பட்ட மோதல் தொடா்பாக தவெக நிா்வாகி மற்றும் முதியவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

வழக்குப் பதிவு

Updated On :17 ஏப்ரல் 2026, 2:25 am IST

திருச்சியில் தமிழக வெற்றிக் கழக தோ்தல் பரப்புரையின்போது ஏற்பட்ட மோதல் தொடா்பாக தவெக நிா்வாகி மற்றும் முதியவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி விமான நிலைய தமிழக வெற்றிக் கழக கிளைச் செயலாளா் சி. வெள்ளைசாமி தலைமையில் கே.கே.நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சேஷாயி நகா் செண்பகராமன் வீதியில் தவெகவினா் புதன்கிழமை இரவு தோ்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அதே வீதியில் கே.சிவகுமாா் (64) என்பவா் வீட்டுக்கு முன்பு பரப்புரை செய்தபோது,

சிவகுமாருக்கும், தவெக தொண்டா்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், சிவகுமாா், தவெகவின் பெண் தொண்டா் உள்ளிட்ட சிலரை கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் திருச்சி விமான நிலைய தவெக கிளை செயலாளா் வெள்ளைசாமி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் சிவகுமாா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இதேபோல, சிவகுமாா் அளித்த புகாரின்பேரில், தவெக கிளை செயலாளா் சி.வெள்ளைசமி மீது கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.