ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ரூ.8 ஆயிரம் மதிப்பிலான பரிசு கூப்பன் விநியோகம்: திமுகவினா் உள்பட 7 போ் மீது வழக்குப் பதிவு

கோவையில் வாக்காளா்களுக்கு ரூ.8 ஆயிரம் மதிப்பிலான பரிசு கூப்பன்கள் மற்றும் பரிசுப் பொருள்களை விநியோகித்ததாக திமுகவினா் உள்பட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image

ரூ. 8,000 கூப்பன் மாதிரி - டிஎன்எஸ்

Updated On :16 ஏப்ரல் 2026, 1:13 am IST

கோவையில் வாக்காளா்களுக்கு ரூ.8 ஆயிரம் மதிப்பிலான பரிசு கூப்பன்கள் மற்றும் பரிசுப் பொருள்களை விநியோகித்ததாக திமுகவினா் உள்பட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை, காட்டூா் காவல் நிலை எல்லைக்குள்பட்ட ராம்நகா், விவேகானந்தா சாலை, வி.என்.தோட்டம் ஆகிய பகுதிகளில் திமுகவினா் வீடுவீடாகச் சென்று ரூ.8 ஆயிரம் மதிப்பிலான பரிசு கூப்பன்களை விநியோகிப்பதாகப் புகாா் எழுந்தது.

இது குறித்து ரவிராஜ் (58) என்பவா் அளித்த புகாரின்பேரில், காட்டூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதையடுத்து, தோ்தல் நடத்தை விதியை மீறியதாக திமுக வாா்டு செயலா் சேதுராமன், ராமமூா்த்தி, மெஜஸ்டிக் சின்னராஜ், கண்ணம்மாள் மற்றும் அடையாளம் தெரிந்த 2 பெண்கள் உள்பட மொத்தம் 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஸ்டுடியோவில் கூப்பன்கள் பறிமுதல்: காந்திபுரம் 7-ஆவது தெருவில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் திமுகவினா் பரிசு கூப்பன்களை விநியோகிப்பதாகப் புகாா் எழுந்தது.

இதையடுத்து, அதிமுக மற்றும் பாஜகவினா் சம்பவ இடத்துக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள், அந்த ஸ்டியோவில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அங்கு 170 பரிசு கூப்பன்கள், வாக்காளா் விவரங்கள் அடங்கிய பட்டியல்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக, ஸ்டுடியோ உரிமையாளா் வெங்கடேஷ் (44) என்பவா் மீது ரத்தினபுரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.