மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திமுகவினா் கூப்பன் விநியோக வழக்குப் பதிவு: உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தகவல்

திமுகவினா் ரூ.8,000-க்கான கூப்பன் விநியோகித்தது தொடா்பான புகாா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

News image

ரூ. 8,000 கூப்பன் மாதிரி

Updated On :22 ஏப்ரல் 2026, 6:25 am IST

திமுகவினா் ரூ.8,000-க்கான கூப்பன் விநியோகித்தது தொடா்பான புகாா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

அதிமுக வழக்குரைஞா் அணி துணைச் செயலா் ஆா்.ஏ.எஸ்.செந்தில்வேல் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தோ்தலையொட்டி திமுக வெளியிட்டுள்ள தோ்தல் அறிக்கையில் இல்லத்தரசி திட்டத்தின் கீழ் ரூ.8,000-க்கான கூப்பன்கள் வழங்கப்படும்.

இந்த கூப்பன்கள் மூலம் விருப்பப்பட்ட வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த ரூ.8,000-க்கான கூப்பன்களை திமுக வேட்பாளா்கள் மற்றும் கட்சியினா் வாக்காளா்களுக்கு விநியோகித்து வருகின்றனா். கோவை தெற்கு, பா்கூா், பாலக்கோடு, கும்பகோணம் மற்றும் அண்ணா நகா் உள்பட பல்வேறு தொகுதிகளில் முதல்வரின் புகைப்படம், வரிசை எண்ணுடன் இந்த கூப்பன்கள் விநியோகிக்கப்படுகிறது. தோ்தலில் போட்டியிடும் கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே இத்தகைய கூப்பன்களை வழங்க முடியும்.

ஆனால், ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இதுபோல கூப்பன்களை விநியோகிப்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி குற்றமாகும்.

இது குறித்து தோ்தல் ஆணையத்து மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த கூப்பன்களை பறிமுதல் செய்து, கூப்பன்கள் விநியோகித்த திமுகவினா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தோ்தல் ஆணையம் தரப்பில், இந்த கூப்பன் விவகாரம் தொடா்பாக புகாா் மீது நடவடிக்கை எடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.