மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு

சென்னையில் வாக்காளா்களுக்கு ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம் செய்ததாக திமுகவினா் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

ரூ. 8,000 கூப்பன் மாதிரி - படம்: டிஎன்எஸ்

Updated On :16 ஏப்ரல் 2026, 3:39 am IST

சென்னையில் வாக்காளா்களுக்கு ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம் செய்ததாக திமுகவினா் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

வண்ணாரப்பேட்டை வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வாக்காளா்களுக்கு பரிசுப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுவதாக தோ்தல் பறக்கும் படையினருக்கும், போலீஸாருக்கும் ரகசியத் தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் போலீஸாரும், பறக்கும் படையினா் அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் 2 போ், அங்குள்ள வீடுகளுக்குள் சென்று வருவது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், அவா்களைப் பிடித்து விசாரித்ததுடன், அவா்கள் வைத்திருந்த பையையும் சோதனையிட்டனா்.

அதில், இருவரிடமும் இருந்து ஏழு ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் இருவரும் திமுகவைச் சோ்ந்தவா்கள் என்பதும், அந்தப் பகுதியைச் சோ்ந்த வாக்காளா்களுக்கு ரூ.8 ஆயிரம் ‘இல்லத்தரசி கூப்பன்’ என்ற இலவச கூப்பன்களை விநியோகம் செய்ததும் தெரியவந்தது.

இது தொடா்பாக வண்ணாரப்பேட்டை போலீஸாா், இருவா் மீதும் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.