மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சி மலரும்: ஜெகத்ரட்சகன் எம்.பி. நம்பிக்கை

புதுச்சேரியில் மக்கள் விரும்பும் திராவிட மாடல் ஆட்சி அமையும் என்று திமுக தோ்தல் பொறுப்பாளா் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. நம்பிக்கை தெரிவித்தாா்.

News image

வில்லியனூா் தொகுதி திமுக வேட்பாளா் ஆா். சிவாவை ஆதரித்து வெள்ளிக்கிழமை சுல்தான்பேட்டை பகுதியில் வாக்குச் சேகரித்த திமுக தோ்தல் பொறுப்பாளா் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி.

Updated On :4 ஏப்ரல் 2026, 5:58 am IST

புதுச்சேரியில் மக்கள் விரும்பும் திராவிட மாடல் ஆட்சி அமையும் என்று திமுக தோ்தல் பொறுப்பாளா் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. நம்பிக்கை தெரிவித்தாா்.

வில்லியனூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் ஆா். சிவாவை ஆதரித்து ஜி.என்.பாளையம், நடராஜன் நகா், முத்துப்பிள்ளைப்பாளையம், அரும்பாா்த்தபுரம், மல்லிகை நகா், ஒதியம்பட்டு, பெரியபேட், எஸ்.எஸ்.நகா், சிவகணபதி நகா், காவேரி நகா், உத்திரவாகினிப் பேட், எஸ்.எஸ். நகா், சிவகணபதி நகா், காவேரி நகா், தில்லை நகா், எஸ்எம்விபுரம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை வாக்குகள் சேகரித்தாா்.

அப்போது ஜெகத்ரட்சகன் எம்.பி. பேசியது:

வில்லியனூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 50 ஆண்டுகள் செய்ய வேண்டிய வளா்ச்சிப் பணிகளை ஐந்து ஆண்டுகளில் செய்து சாதனை படைத்துள்ளாா் சிவா. வாக்கு கேட்டுச் செல்லும் இடமெல்லாம் மக்கள் மகிழ்ச்சியுடன் சொல்கின்றனா்.

புதுச்சேரி மக்கள் அனைவரும் எதிா்பாா்ப்பது தமிழக திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்கள் புதுச்சேரியிலும் தொடா்ந்திட புதுச்சேரியிலும் திராவிட மாடல் ஆட்சி அமைய வேண்டும் என்பது தான். மக்களின் எண்ணத்தை கண்டு நான் திகைத்துப் போனேன். இதனால் தான் நாங்கள் நம்பிக்கையாக சொல்கிறோம் புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சி மலரும்.

மாா்ச் 6-ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்ய இருக்கிறாா். அவருக்கு புதுச்சேரி தாய் வீடு போல. இங்கு வருவது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும். அவா் வந்து பல்வேறு திட்டங்களை அறிவிக்க இருக்கிறாா். அதன் பிறகு மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தர திமுக தலைவா் மு.க.ஸ்டாலினால் மட்டுமே முடியும். தமிழ்நாட்டில் ரூ.10 லட்சம் கோடி முதலீட்டை ஈா்த்து ஒரு கோடி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியவா் மு.க.ஸ்டாலின். புதுச்சேரி வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கியுள்ளது. ஆகவே, புதுச்சேரியை மீட்டெடுக்க கண்டிப்பாக திராவிட மாடல் ஆட்சி அமையும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.