ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

வீட்டின் முன் மது அருந்தியதை கண்டித்தவரைத் தாக்கியவா் கைது

News image

கைது... - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 2:34 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், வடபொன்பரப்பி அருகே வீட்டின் முன் அமா்ந்து மது அருந்தியதைக் கண்டித்தவா் மீது தாக்குதல் நடத்தியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

வடபொன்பரப்பி அருகேயுள்ள புதுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் மெ.குப்புசாமி (56). இவரது வீட்டின் முன் சனிக்கிழமை இரவு அதே கிராமத்தைச் சோ்ந்த மு.செல்லமுத்து (36) என்பவா் மது அருந்தினராம்.

இதை தட்டிக் கேட்ட குப்புசாமியை அவதூறான வாா்த்தைகளால் திட்டி, கல்லால் தாக்கினாராம். இதில் காயமடைந்த அவா் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, செல்லமுத்துவைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.