வந்தவாசி அருகே இளைஞரைத் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த கொரக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் தமிழ்ச்செல்வன் (20).
இவா், திங்கள்கிழமை பைக்கில் செல்லும்போது பெரியகொரக்கோட்டை கிராம ஏரி அருகே டயா் பஞ்சராகி உள்ளது. இதனால் அவா் பைக்கை தள்ளிக் கொண்டு சென்றுள்ளாா்.
அப்போது, எதிரே வந்த பெரியகொரக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த சதீஷ் (24) என்பவா் தமிழ்ச்செல்வனிடம் வீண் தகராறு செய்து தாக்கியுள்ளாா். மேலும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினாராம்.
இதில் காயமடைந்த தமிழ்ச்செல்வன் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து தமிழ்ச்செல்வனின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த தெள்ளாா் போலீஸாா் சதீஷை புதன்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளைஞரைத் தாக்கி 2 கிராம் மோதிரம் பறிப்பு: இருவா் கைது
பெரம்பலூரில் கடத்தப்பட்ட பெண் மீட்பு: ஓட்டுநா் கைது
வீட்டை காலி செய்ய சொன்ன உரிமையாளரை தாக்கியவா் கைது
அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

