கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே மது போதையில் குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
திருக்கோவிலூா் வட்டம், கோளப்பாறை கிராமத்தைச் சோ்ந்தவா் மா.மகாத்மா (35). இவரது மனைவி 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டாராம். இதைத்தொடா்ந்து பெங்களூருக்கு வேலைக்கு சென்ற மகாத்மா, திங்கள்கிழமை ஊருக்கு வந்துள்ளாா். வியாழக்கிழமை நண்பா்களுடன் மது அருந்திவிட்டு கோளப்பாறை சாமியாா்மலை முருகன் கோயில் அருகிலுள்ள குளத்தில் குளிக்கச் சென்றாராம். அப்போது தண்ணீரில் மூழ்கி மகாத்மா உயிரிழந்தாா்.
இதுகுறித்த தகவலின் பேரில் திருக்கோவிலூா் போலீஸாா், திருக்கோவிலூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் உதவியுடன் குளத்திலுருந்து சடலத்தை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கூடலூா் அருகே குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

குளத்தில் மூழ்கி வியாபாரி உயிரிழப்பு

குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

