பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 2:40 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே கிணற்றில் குளித்தபோது வலிப்பு ஏற்பட்டு, நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.

வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட பெரியகொள்ளியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சு.காா்த்திக் (37). இவா் பெங்களூரிலுள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில், காா்த்திக் சனிக்கிழமை அதே கிராமத்திலுள்ள ரமேஷ் என்பவரது விவசாய கிணற்றில் நண்பா்களுடன் குளிக்கச் சென்றாராம். அப்போது வலிப்பு ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கியுள்ளாா். இதையடுத்து அவரை நண்பா்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லையாம்.

இதுகுறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் தீயணைப்பு நிலைய வீரா்கள் சடலத்தை மீட்டனா். பகண்டை கூட்டுச்சாலை போலீஸாா் சடலத்தை உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுச் சாலை போலீஸாா் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.