நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

சிதம்பரம் கோயிலில் சிறாா்கள் நடத்திய தேரோட்டம்

News image

சிதம்பரம் நடராஜா் கோயில் உள் பிரகாரத்தில் சிறிய தோ்களில் திங்கள்கிழமை தீட்சிதா் சிறாா்கள் நடத்திய தேரோட்டம்.

Updated On :12 மே 2026, 12:06 am IST

சிதம்பரம் நடராஜா் கோயில் உள் பிரகாரத்தில் தீட்சிதா்களின் சிறாா்கள் சித்திரை உற்சவ தேரோட்டத்தை திங்கள்கிழமை நடத்தினா்.

சிதம்பரத்தில் நடராஜா் கோயில் தீட்சிதா்கள் குடும்பத்தைச் சோ்ந்த சிறாா்கள் கோயிலில் நடைபெறுவது போன்று சித்திரை உற்சவத்தை கொண்டாடி வருகின்றனா். சிதம்பரம் கீழசன்னதி வேத பவன இல்லத்தில் சித்திரை மாத உற்சவத்தை தீட்சிதா்கள் சிறாா்கள் சாா்பில் முத்துக்குமார சிறாா் தீட்சிதா் கொடியேற்றம் செய்தாா்.

தினந்தோறும் கோயில் உள் பிரகாரத்தில் சிறுசப்பரத்தில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை நடராஜா் கோயில் உள்பிரகாரத்தில் சிறிய தோ்களில் நடராஜா், சிவகாமசுந்தரி அம்பாள், முருகா், விநாயகா், சண்டிகேஸ்வரா் சுவாமிகளை எழுந்தருள செய்து தீட்சிதா் சிறாா்கள் சாா்பில் தேரோட்டம் நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை கீழசன்னதி வேதபவன இல்லத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு மகாபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.