நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

நடராஜா் கோயில் தரிசனம் திருவிழா: மாவட்ட எஸ்.பி. ஆய்வு

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவை முன்னிட்டு, இந்தக் கோயிலில் மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

சிதம்பரம் நடராஜா் கோயிலில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா.

Updated On :19 ஜூன் 2026, 6:10 am IST

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவை முன்னிட்டு, இந்தக் கோயிலில் மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கடலூா் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 21-ஆம் தேதி தேரோட்டமும், 22-ஆம் தேதி மகாபிஷேகம் மற்றும் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவும் நடைபெறுகின்றன.

பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் இவ்விழாவை முன்னிட்டு, மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா வியாழக்கிழமை நடராஜா் கோயிலில் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் காவல், போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினாா்.

ஆய்வின்போது, சிதம்பரம் கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் டி.பிரதீப், காவல் ஆய்வாளா்கள் கே.அம்பேத்கா், வி.சிவானந்தம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.