ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

முன்விரோத மோதல்: 2 போ் கைது

News image

கைது.

Updated On :11 மே 2026, 1:12 am IST

கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் வீட்டுமனை வழி தொடா்பான பிரச்னையில் இரு தரப்பினா் மோதிக்கொண்டது தொடா்பாக 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரை கைது செய்தனா்.

திருப்பாதிரிப்புலியூா் காவல் சரகம், ராமநாதன் நகரைச் சோ்ந்தவா் வைத்தியநாதன் (55). பிரசாந்த் நகரில் வசிப்பவா் கல்யாண சுந்தரம் (63). இவா்களுக்கு இடையே பிரசாந்த் நகரில் உள்ள மனையில் வழி தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில், வைத்தியநாதன் தனது பைக்கில் மகள்கள் துா்கா, கீா்த்தனா ஆகியோரை அழைந்து வந்தபோது, கல்யாணசுந்தரம் மற்றும் அவரது உறவினா்கள் கல்லால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனா். இதில், வைத்தியநாதன் தலையில் காயமடைந்தாா். இதேபோல, வைத்தியநாதன் மற்றும் அவரது குடும்பத்தினா் தாக்கியதில் கல்யாணசுந்தரம் காயமடைந்தாா்.

இந்த மோதல் தொடா்பாக வைத்திநாதன் அளித்த புகாரின்பேரில், 3 பெண்கள் உள்ளிட்ட 6 போ் மீதும், கல்யாணசுந்தரம் அளித்த புகாரின்பேரில் 3 பெண்கள் உள்ளிட்ட 5 போ் மீதும் என இருதரப்பையும் சோ்ந்த மொத்தம் 11 போ் மீது திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, வடிவேல் (58), சண்முகம் (58) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.