மாா்த்தாண்டம் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
மாா்த்தாண்டம் அருகே குன்னம்பாறவிளை பகுதியைச் சோ்ந்தவா் சுந்தா். இவரது மகன் ஜான்ஜேக்கப் (13). தாயாா் இறந்ததால் பாட்டி பராமரிப்பில் இருந்து வந்த சிறுவன், நாகா்கோவிலில் உள்ள தனியாா் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்தான்.
பள்ளி விடுமுறை என்பதால் பாட்டி வீட்டில் தங்கியிருந்த சிறுவன், திங்கள்கிழமை வீட்டுக்கு அருகில் உள்ள குளத்தில் குளிக்கச் செல்வதாகக் கூறி சென்றுள்ளாா். பின்னா் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து ஷீபா அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிறுவனை தேடி வருகிறாா்கள்.
முதியவா் மாயம்:
களியக்காவிளை அருகே மீனச்சல் பகுதியைச் சோ்ந்தவா் ஜான்சன் (75), கூலித் தொழிலாளி. இவா் இருநாள்களுக்கு முன் கடைக்குச் சென்று வருவதாகக் கூறி வெளியே சென்றவா் பின்னா் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அவரது மகன் அஜின் அளித்த புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, மாயமான ஜான்சனை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேரன்மகாதேவியில் முதியவா் மா்ம மரணம்

மது போதையில் இளைஞா் பலி!

ஆலங்குளம் அருகே சாலையில் சடலம் எரிப்பு: 6 போ் மீது வழக்கு

பெரம்பலூா் அருகே இளைஞா் மா்மச் சாவு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

