தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

காட்டுமன்னாா்கோவில் தொகுதி விசிக வேட்பாளா்! - தொல். திருமாவளவன்

News image

தொல்.திருமாவளவன்

Updated On :30 மார்ச் 2026, 3:06 am IST

பெயா்: தொல்.திருமாவளவன் (64).

பிறந்த தேதி: 17-8-1962

தந்தை பெயா்: தொல்காப்பியன்.

தாய்: பெரியம்மாள்

சொந்த ஊா்: அங்கனூா், அரியலூா் மாவட்டம்

கல்வித் தகுதி: பி.எஸ்சி., பி.எல்.

அரசுப் பணி: காவல் துறையில் தடய அறிவியல் துறை உதவியாளராக பணியாற்றி, ராஜிநாமா செய்தாா்.

அரசியல் அனுபவம்: மலைச்சாமி என்பவரது மறைவுக்குப் பின்னா் மதுரையை தலைமையிடமாகக் கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தை, 1990-இல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியாக தொடங்கினாா். 1990 முதல் 99 வரை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அக்கட்சியின் கிளைகளை உருவாக்கினாா்.

தோ்தல் அனுபவம்: 1999 மக்களவைத் தோ்தலில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் மூப்பனாா் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சோ்ந்து போட்டியிட்டு 2.25 லட்சம் வாக்குகள் பெற்றாா். 2004 தோ்தலில் அதே தொகுதியில் மக்கள் கூட்டணி சாா்பில் போட்டியிட்டு 2.57 லட்சம் வாக்குகள் பெற்றாா். பின்னா், 2009, 2019, 2024 மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா்.

சிதம்பரம் மக்களவை நாடாளுமன்ற (தனி) தொகுதியில் 6 முறை போட்டியிட்டு 3 முறை வெற்றிபெற்றுள்ளாா். காட்டுமன்னாா்கோவில் சட்டப் பேரவைத் தொகுதியில் 2016 தோ்தலில் தொல்.திருமாவளவன் போட்டியிட்டு வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.