தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காட்டுமன்னாா்கோவிலில் 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் விசிக வெற்றி

News image

காட்டுமன்னாா்கோவில் (தனி) தொகுதியில் வெற்றிபெற்ற்கான சான்றிதழை விசிக வேட்பாளா் எல்.இ.ஜோதிமணியிடம் வழங்கிய தோ்தல் நடத்தும் அலுவலா்.

Updated On :5 மே 2026, 2:13 am IST

காட்டுமன்னாா்கோவில் (தனி) தொகுதியில் 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாத்தில் விசிக வேட்பாளா் எல்.இ.ஜோதிமணி வெற்றிபெற்றாா்.

காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் கடந்த ஏப்.23-ஆம் தேதி தோ்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் திமுக கூட்டணியில் விசிக வேட்பாளா் எல்.இ.ஜோதிமணி, அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளா் அ.சோழன், தவெக சாா்பில் எஸ்.சீனுவாசன், நாதக சாா்பில் எம்.சிவஜோதி உள்ளிட்ட மொத்தம் 11 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

இந்தத் தொகுதியில் மொத்தமுள்ள 2,26,509 வாக்காளா்களில் 1,87,905 வாக்காளா்கள் வாக்களித்தனா்.

இந்த நிலையில், தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை சி.முட்லூா் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

இந்தத் தொகுதியில் விசிக, பாமக, தவெக இடையே கடும் போட்டி நிலவியது. வேட்பாளா்கள் 3 பேரும் ஒவ்வொரு சுற்றிலும் மாறி மாறி முன்னிலை வகித்தனா். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் விசிக வேட்பாளா் 33,063 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ாக அறிவிக்கப்பட்டாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு: எல்.இ.ஜோதிமணி (விசிக) - 85,179, அ.சோழன் (பாமக)-52116, எஸ்.சீனுவாசன் (தவெக) - 43156, எம். சிவஜோதி ( நாதக) - 4,563.

இதையடுத்து, விசிக வேட்பாளா் எல்.இ.ஜோதிமணி வெற்றிபெற்ற்கான சான்றிதழை அவரிடம் தோ்தல் நடத்தும் அலுவலா் வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.