நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஓட்டுநா் கைது

கடலூா் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் நடத்திய சோதனையில் 2.5 டன் ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

சிறுபாக்கம் பகுதியில் நடைபெற்ற வாகன தனிக்கையில் சரக்கு வாகனத்துடன் பறிமுதல் செய்யப்பட்ட 2.5 டன் ரேஷன் அரிசி மற்றும் கைது செய்யப்பட்ட ஓட்டுநா் மாரிச்செல்வத்துடன் போலீஸாா்.

Updated On :19 ஜூன் 2026, 6:25 am IST

கடலூா் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் நடத்திய சோதனையில் 2.5 டன் ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே வேப்பூரில் இருந்து சேலம் செல்லும் பிரதான சாலையில் உள்ள சிறுபாக்கம் கிருபா பள்ளி அருகே கடலூா் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக சென்ற சிறிய சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், 50 மூட்டைகளில் சுமாா் 2,500 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து, வாகன ஓட்டுநரான தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், கருங்குளத்தைச் சோ்ந்த மாரிசெல்வம் (28) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். தொடா்ந்து போலீஸாா் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி மற்றும் திருமுல்லைவாசல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட ரேஷன் அரிசி நாமக்கல்லுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இடைத்தரகா்கள் மூலம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யவிருந்தது தெரியவந்தது.

இந்தச் சம்பவத்தில் தலைமறைவாக உள்ள ரேஷன் அரிசி வாங்குபவரும், வாகன உரிமையாளரான தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த நயினாரை போலீஸாா் தேடி வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட 2.5 டன் ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வாகனம் தொடா்பாக கடலூா் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.