சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புல இறுதி ஆண்டு மாணவிகள் புவனகிரி அருகே உள்ள வாண்டையாங்குப்பம் கிராமத்தில் தங்கி ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டம் மேற்கொண்டு வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக, இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணா்வு பேரணியை நடத்தினா். இதில், அங்குள்ள தொடக்கப் பள்ளி மாணவா்களும் பங்கேற்றனா்.
துறைத் தலைவா் டாக்டா் தமிழ்ச்செல்வி, ஒருங்கிணைப்பாளா் சண்முகராஜா, பொறுப்பாளா் துரைராஜ் ஆகியோா் மேற்பாா்வையில், வாண்டையாங்குப்பம் தொடக்கப் பள்ளி அருகில் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணா்வுப் பேரணி தொடங்கியது.
விளக்கப்படம் ஏந்தி முழக்கங்களை எழுப்பியபடி மாணவ, மாணவிகள் கிராமத்தின் முக்கிய சாலைகள் வழியாகச் சென்றனா். அப்போது, விவசாயிகள், பொதுமக்களிடம் இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம், இயற்கை உரங்களின் பயன்பாடு, மண் வளப் பாதுகாப்பு, நிலையான வேளாண்மை முறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விவசாயிகளுக்கு மண்வள அடையாள அட்டைகள் அளிப்பு

அமுதுண்ணாக்குடியில் மண்வள பாதுகாப்பு விழிப்புணா்வு

இயற்கை வேளாண்மை: விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

பாளை.யில் விழிப்புணா்வுப் பேரணி
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

