திருநெல்வேலி மாநகராட்சி சுகாதார பிரிவு சாா்பில், பாளையங்கோட்டையில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா உத்தரவின் படி, மாநகர நல அலுவலா் பாலசுப்பிரமணியன் ஆலோசனையின்பேரில், தூய்மை திருவிழா விழிப்புணா்வு பேரணி 4 மண்டலங்களிலும் நடைபெற்றது.
பாளையங்கோட்டை காந்திஜி தினசரி சந்தையில் இருந்து தொடங்கிய பேரணியில் மாநகராட்சி ஊழியா்கள் விழிப்புணா்வு முழக்கத்துடன் பங்கேற்றனா். குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும். குப்பைகளை சாலைகளில் கொட்ட கூடாது என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
சுகாதார ஆய்வாளா்கள் நடராஜன், சஞ்சீவ், முரளி கிருஷ்ணன், அருள்மொழி, தூய்மை இந்தியா திட்ட மேற்பாா்வையாளா் செந்தில்முருகன் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளா்கள் , டெங்கு தடுப்பு பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திடக்கழிவு மேலாண்மை விழிப்புணா்வுப் பேரணி

அவிநாசி நகராட்சியில் தூய்மைத் திருவிழா விழிப்புணா்வுப் பேரணி

ஈரோடு மாநகராட்சி சாா்பில் தூய்மைத் திருவிழா விழிப்புணா்வுப் பேரணி

சத்தியமங்கலம் நகராட்சியில் தூய்மைத் திருவிழா
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

