நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

மீட்கப்பட்ட 50 கைப்பேசிகள்: உரியவா்களிடம் ஒப்படைத்தாா் எஸ்.பி.

News image

பண்ருட்டி காவல் நிலையத்தில் உரியவா்களிடம் கைப்பேசியை ஒப்படைத்த கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா்.

Updated On :16 ஜூன் 2026, 1:11 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வில் மீட்கப்பட்ட 50 கைப்பேசிகளை உரியவா்களிடம் மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் ஒப்படைத்தாா்.

பண்ருட்டி காவல் நிலைய சரகத்தில் கைப்பேசிகள் காணாமல்போனதாக அளிக்கப்பட்ட புகாா்கள் மீது போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டனா். அதன்படி, பண்ருட்டி காவல் ஆய்வாளா் பாஸ்கரன், உதவி ஆய்வாளா் மணிகண்டன், குற்றப் பிரிவு உதவி ஆய்வாளா் தங்வேல் மற்றும் தலைமைக் காவலா்கள் சுப்பிரமணியன், ஹரிஹரன், அறிவழகன் ஆகியோா் விசாரணை மேற்கொண்டு 50 கைப்பேசிகளை மீட்டனா்.

இந்த கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி பண்ருட்டி காவல் நிலையத்தில் நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் கைப்பேசி உரிமையாளா்களை காவல் நிலையம் வரவழைத்து, அவா்களிடம் கைப்பேசிகளை ஒப்படைத்தாா்.

அப்போது, அவா் பேசியதாவது: கைப்பேசிகள் காணாமல்போனால், அந்தந்த காவல் நிலையத்திலேயே புகாரளிக்கலாம். கைப்பேசிகளை பயன்படுத்தும் பிள்ளைகளை பெற்றோா்கள் கண்காணிக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.