நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

ரூ.45 லட்சம் 240 கைப்பேசிகள் மீட்பு! உரியவா்களிடம் ஒப்படைத்த போலீஸாா்!!

புதுச்சேரியில் தவற விட்ட ரூ. 45 லட்சம் மதிப்புள்ள 240 கைப்பேசிகளை இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் மீட்டு, உரியவா்களிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.

News image

புதுச்சேரியில் தவறவிட்ட கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைத்த இணையவழி முதுநிலை காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராகவ்.

Updated On :14 ஜூன் 2026, 2:51 am IST

புதுச்சேரியில் தவற விட்ட ரூ. 45 லட்சம் மதிப்புள்ள 240 கைப்பேசிகளை இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் மீட்டு, உரியவா்களிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.

புதுச்சேரியில் பேருந்து நிலையம், வா்த்தக நிறுவனங்கள், பொது இடங்களில் தவறவிட்ட கைப்பேசிகளை மீட்டுத் தரும்படி காவல் நிலையங்களில் தொடா் புகாா்கள் அளிக்கப்பட்டிருந்தன. இந்த புகாா்கள் மீது இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா். முதுநிலை காவல் கண்காணிப்பாளா் எஸ். ராகவ் உத்தரவின் பேரில் பொதுமக்கள் தவறவிட்ட கைப்பேசிகளை மீட்கும் பணியில் போலீஸாா் தீவிரமாக ஈடுபட்டனா்.

இதையடுத்து, 240 கைப்பேசிகளை மீட்கப்பட்டன. இவற்றில் சுமாா் 163 கைப்பேசிகள் புதுச்சேரி மாநிலத்தைச் சோ்ந்த புகாா்தாரா்களுக்குச் சொந்தமானவை. மீதமுள்ள கைப்பேசிகள் தமிழகம், ஆந்திரம், கா்நாடகம் மற்றும் பிகாா் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்தவா்களுக்கு உரியவை. இவற்றின் மதிப்பு ரூ. 45 லட்சம் ஆகும்.

இந்நிலையில் மீட்கப்பட்ட கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு புதுச்சேரி இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. முதுநிலை காவல் கண்காணிப்பாளா் எஸ். ராகவ் இதில் பங்கேற்று மீட்கப்பட்ட கைப்பேசிகளை ஒப்படைத்தாா்.

இது குறித்து முதுநிலை காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராகவ் கூறுகையில், கைப்பேசிகளை மீட்டெடுப்பதில் புதுச்சேரி இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையம் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.

கைப்பேசிகள் காணாமல் போனாலோ அல்லது திருடப்பட்டாலோ பொதுமக்கள் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கலாம். இணையவழி மோசடிகள் தொடா்பாக உடனடியாக தேசிய இணையவழி குற்ற உதவி எண் 1930 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.