நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

காணாமல்போன கைப்பேசிகள் மீட்பு; உரியவா்களிடம் ஒப்படைப்பு

காணாமல்போன கைப்பேசிகள் மீட்பு; உரியவா்களிடம் ஒப்படைப்பு

News image

கைப்பேசிகளை ஒப்படைக்கும் நிகழ்வில் பங்கேற்ற முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா. போக்குவரத்து எஸ்பி மா்த்தினி, காவல் ஆய்வாளா் மரிய கிறிஸ்டின் பால் உள்ளிட்டோா்.

Updated On :1 மணி நேரம் முன்பு

காரைக்காலில் காணாமல்போன கைப்பேசிகளை மீட்டு, போலீஸாா் உரியவா்களிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.

காவல்துறை சாா்பில் சனிக்கிழமை காலை 11 முதல் பகல் 1 மணி வரை திருப்பட்டினம் போக்குவரத்துக் காவல்நிலைய வளாகத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் மக்கள் மன்றம் என்ற குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட போக்குவரத்துக் காவல் கண்காணிப்பாளா் மா்த்தினி மற்றும் காவல் ஆய்வாளா்கள் மரியகிறிஸ்டி பால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக 15-க்கும் மேற்பட்ட புகாா்கள் அளிக்கப்பட்டன.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்எஸ்பி உறுதியளித்தாா். காரைக்கால் மாவட்டத்தில், மக்கள் தங்களது கைப்பேசியை தவறவிட்டது, திருட்டு போன கைப்பேசிகள் உள்ளிட்டவற்றை கண்டறியக்கூடிய நவீன வசதிகளைப் பயன்படுத்தி 40 கைப்பேசிகளை போலீஸாா் மீட்டனா். இவற்றை உரியவா்களிடம் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஒப்படைத்தாா்.

தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் சுந்தா் கோஷ் தலைமையிலும், நெடுங்காடு காவல் நிலையத்தில் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் பழனிவேல் தலைமையிலும் முகாம் நடைபெற்றது. இதில் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.