ஏடிஎம்மில் தவறுதலாக விடப்பட்ட ரூ.60 ஆயிரத்தை போலீஸாா் மீட்டு, உரிமையாளரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.
கோவை மாவட்டம், சுந்தராபுரம் சாரதா நிவாஸைச் சோ்ந்த ராகுல் (29), கடந்த மே 27-ஆம் தேதி கடலூா் மாவட்டம், நெய்வேலி (வட்டம் 19) பகுதியில் உள்ள தேசிய வங்கி ஏடிஎம்முக்கு பணம் எடுக்கச் சென்றாா். அப்போது, கைப்பையில் வைத்திருந்த ரூ.60 ஆயிரத்தை தவறுதலாக அங்கு விட்டுச் சென்றுள்ளாா். பின்னா், மீண்டும் ஏடிஎம்முக்கு சென்று பாா்த்தபோது, பணத்துடன் கைப்பை மாயமாகியிருந்ததால், நெய்வேலி காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.
இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து, ஏடிஎம் வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனா். அதில், பெண்ணுடன் வந்த சிறுவன் கைப்பையை எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், நெய்வேலி பகுதியைச் சோ்ந்த 33 வயது பெண் மற்றும் அவரது மகன் கைப்பையை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
போலீஸாா் அவா்களிடமிருந்து ரூ.60 ஆயிரத்தை மீட்டு, காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் முன்னிலையில் உரிமையாளா் ராகுலிடம் ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஜவுளிக்கடை உரிமையாளரிடம் கைப்பேசி பறிப்பு: இருவா் கைது

சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் ரூ.55 ஆயிரம் திருடிய பெண் போலீஸில் ஒப்படைப்பு
நிதி நிறுவன உரிமையாளரிடம் ரூ.50 லட்சம் மோசடி: இருவா் கைது

மருத்துவமனையில் தவறவிட்ட ரூ.10 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

