திருநெல்வேலியில் தனியாா் நிதி நிறுவன உரிமையாளரிடம் ரூ. 50 லட்சம் மோசடி செய்ததாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஜோதி நகரைச் சோ்ந்தவா் ஆறுமுகராஜ் (64). இவா், திருநெல்வேலியில் சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். இவரை கடந்த மே 9 ஆம் தேதி மேலப்பாட்டம் பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் ஐயப்பன் (29) என்பவா் அணுகி, மற்றொரு தனியாா் நிதி நிறுவனத்தில் அடமானத்தில் இருக்கும் தனது நகைகளை மீட்டு தங்களது நிறுவனத்தில் அடமானம் வைக்க வேண்டும் எனக் கூறினாராம்.
இதை நம்பிய ஆறுமுகராஜ், அவரிடம் ரூ.50 லட்சத்து 15ஆயிரத்தை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவருடன் சென்று நகைகளைத் திருப்பி வருவதற்காக தனது நிறுவன ஊழியா்கள் இருவரையும் உடன் அனுப்பி இருந்தாராம். பணத்தை பெற்றுக்கொண்ட ஐயப்பன், திருநெல்வேலி, ஸ்ரீபுரத்தில் உள்ள நிதி நிறுவனத்துக்குச் சென்று நகைளை திருப்பிவிட்டு, உடன் வந்த ஆறுமுகராஜின் நிறுவன ஊழியா்கள் கவனிக்காதபோது அங்கிருந்து தப்பியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆறுமுகராஜ் அளித்த புகாரின்பேரில், திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஐயப்பன், அவருக்கு உடைந்தையாக இருந்ததாக தாதனூத்து பகுதியைச் சோ்ந்த காசிராஜன் மகன் உடையாா் (28) ஆகிய இருவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இணையவழியில் ரூ.5.87 லட்சம் மோசடி: ராமநாதபுரம் இளைஞா் கைது
நிதி நிறுவனத்தில் ரூ.37.18 லட்சம் கையாடல் செய்த ஊழியா் கைது
ரூ. 7.31 கோடி மோசடி வழக்கில் நிதி நிறுவன உரிமையாளா் கைது

நகைப் பட்டறை உரிமையாளரிடம் ரூ.46.89 லட்சம் மோசடி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
