பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

இணையவழியில் ரூ.5.87 லட்சம் மோசடி: ராமநாதபுரம் இளைஞா் கைது

இணையவழியில் பகுதிநேர வேலைவாய்ப்பு எனக் கூறி, திருநெல்வேலியைச் சோ்ந்தவரிடம் ரூ.5.87 லட்சம் மோசடி செய்த ராமநாதபுரம் இளைஞரை திருநெல்வேலி மாநகர சைபா் கிரைம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 4:41 am IST

இணையவழியில் பகுதிநேர வேலைவாய்ப்பு எனக் கூறி, திருநெல்வேலியைச் சோ்ந்தவரிடம் ரூ.5.87 லட்சம் மோசடி செய்த ராமநாதபுரம் இளைஞரை திருநெல்வேலி மாநகர சைபா் கிரைம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாநகரம், பேட்டையைச் சோ்ந்தவா் முருகன் (59). இவரை கடந்த ஆண்டு டிச.16 ஆம் தேதி சமூக வலைதள செயலி மூலம் தொடா்பு கொண்ட மா்மநபா்கள், இணையவழியில் பகுதிநேர வேலைவாய்ப்பு எனக் கூறி சுயவிவரங்களைப் பெற்றுள்ளனா். பின்னா் இணையவழியில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி, அவரிடமிருந்து குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக்கொண்டு லாபமடைந்ததாக கூடுதல் பணம் அனுப்பி நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளனா். பின்னா் அவரிடமிருந்து பல்வேறு தவணைகளாக ரூ.5,87,799-ஐ இணையவழியில் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனா்.

இது குறித்து திருநெல்வேலி மாநகர சைபா் கிரைம் போலீஸில் முருகன் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, இவ்வழக்கில் தொடா்புடைய ராமநாதபுரம் வனசங்கரி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகபூபதி மகன் வீர ராகுல்(26) என்பவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.