கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மருத்துவமனையில் தவறவிட்ட ரூ.10 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைப்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் மருத்துவமனையில் லாரி ஓட்டுநா் தவறவிட்ட ரூ.10 ஆயிரம் உரியவரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

News image

சிதம்பரம் அண்ணாமலைநகா் மருத்துவமனையில் தவறவிட்ட ரூ.10 ஆயிரத்தை கண்டெத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த காவலாளி உள்ளிட்ட இருவரிடம் பெற்றுக்கொண்ட கண்டமங்கலத்தை சோ்ந்த சாமிநாதன். உடன் காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 4:07 am IST

கடலூா் மாவட்டம், சிதம்பரம் மருத்துவமனையில் லாரி ஓட்டுநா் தவறவிட்ட ரூ.10 ஆயிரம் உரியவரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

காட்டுமன்னாா்கோவில் கண்டமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் சாமிநாதன் (53). லாரி ஓட்டுநரான இவா், விபத்துக்குள்ளான தனது மகனை சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தாா்.

பின்னா், சாமிநாதன் மருத்துவமனையின் பின்புறம் உள்ள தேநீா் கடை அருகே சென்றபோது தான் வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாயை தவறவிட்டாா்.

இந்த நிலையில், அதே மருத்துவமனையில் பிளம்பராக பணியாற்றும் சந்திரபாண்டியன், காவலாளியாக பணியாற்றும் சங்கா் ஆகிய இருவரும் கீழே கிடந்த 10 ஆயிரம் ரூபாயை எடுத்து அண்ணாமலைநகா் காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா். அவா் இதுகுறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டாா்.

இதைறிந்த பணத்தை தொலைத்த சாமிநாதன் அண்ணாமலைநகா் காவல் நிலையம் சென்று ஆய்வாளரிடம் தான் தவறவிட்ட ரூ.10 ஆயிரத்தை பெற்றுக்கொண்டாா். கீழே கிடந்த பணத்தை நோ்மையாக எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சந்திரபாண்டியன் (45), சங்கா் (57) ஆகிய இருவரையும் சிதம்பரம் டிஎஸ்பி பிரதீப், காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா் ஆகியோா் வெகுவாகப் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.