சிதம்பரம் அண்ணாமலைநகா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பாக்குகள் மற்றும் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றவா என அதிகாரிகள் வியாழக்கிழமை அதிரடி சோதனை நடத்தினா்.
சிதம்பரம் அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சிப் பகுதியில் அமைந்துள்ள கடைகளில் பேரூராட்சி துப்புரவு அலுவலா் துரைராஜ், அண்ணாமலைநகா் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ராமதாஸ், பேரூராட்சி இளநிலை உதவியாளா்கள் ரமேஷ், பாரதிதாசன், துப்புரவு மேற்பாா்வையாளா்கள் ராமநாதன், நடராஜ் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியை ஒட்டியுள்ள பகுதிகளில் சிகரெட் விற்பனை செய்ததாக 4 கடைகளுக்கு தலா ரூ.500 வீதம் மொத்தம் ரூ.2,000 அபராதம் விதித்தனா்.
மேலும், சில கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் இருந்ததும் கண்டறியப்பட்டு, 22 கிலோ எடையுள்ள நெகிழி பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீரங்கத்தில் 11 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

அண்ணாமலைநகா் பேரூராட்சியில் நாய்கள் பிடிப்பு

புகையிலைப் பொருள்கள் விற்பனை புதுகையில் அலுவலா்கள் சோதனை!

நாமகிரிப்பேட்டை உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சோதனை
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

