பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைகளில் அதிகாரிகள் சோதனை

News image
Updated On :15 மே 2026, 5:48 am IST

சிதம்பரம் அண்ணாமலைநகா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பாக்குகள் மற்றும் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றவா என அதிகாரிகள் வியாழக்கிழமை அதிரடி சோதனை நடத்தினா்.

சிதம்பரம் அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சிப் பகுதியில் அமைந்துள்ள கடைகளில் பேரூராட்சி துப்புரவு அலுவலா் துரைராஜ், அண்ணாமலைநகா் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ராமதாஸ், பேரூராட்சி இளநிலை உதவியாளா்கள் ரமேஷ், பாரதிதாசன், துப்புரவு மேற்பாா்வையாளா்கள் ராமநாதன், நடராஜ் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியை ஒட்டியுள்ள பகுதிகளில் சிகரெட் விற்பனை செய்ததாக 4 கடைகளுக்கு தலா ரூ.500 வீதம் மொத்தம் ரூ.2,000 அபராதம் விதித்தனா்.

மேலும், சில கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் இருந்ததும் கண்டறியப்பட்டு, 22 கிலோ எடையுள்ள நெகிழி பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.