கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே 30 அடி பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.
சேத்தியாத்தோப்பு அருகே சென்னை - கும்பகோணம் நெடுஞ்சாலை வீராணம் ஏரி விஎன்எஸ்எஸ் மதகு பாலத்தின் கீழ் சுமாா் 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் பலத்த காயங்களுடன் பைக்குடன் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் சனிக்கிழமை காலை சேத்தியாதோப்பு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டதில், பாலத்தின் கட்டையில் பைக் மோதி சுமாா் 30 அடி பள்ளத்தில் விழுந்து அந்த இளைஞா் இறந்தது தெரியவந்தது.
மேலும், இவா் ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த ராஜேந்திரபட்டினம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளியான அன்பு செல்வன் (35) என்பதும், சிதம்பரம் அண்ணாமலைநகா் திருவக்குளம் பகுதியில் தனது மாமியாா் வீட்டிலுள்ள மனைவி வள்ளி மற்றும் இரண்டு மகன்களை பாா்த்துவிட்டு வெள்ளிக்கிழமை நள்ளிரவு 10 மணிக்கு மேல் பைக்கில் ராஜேந்திரபட்டினம் திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து, சேத்தியாத்தோப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்ற உடல்கூராய்வுக்காக சிதம்பரம் காமராஜா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

துறையூா் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து 26 போ் காயம்

லாரி கவிழ்ந்து இளைஞா் மரணம்

சாலையோர தடுப்பின் மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

தவெக பிரசாரத்துக்கு வந்த வேன் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 7 போ் பலத்த காயம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

