தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்து: இளைஞா் மரணம்

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே 30 அடி பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 1:23 am IST

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே 30 அடி பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.

சேத்தியாத்தோப்பு அருகே சென்னை - கும்பகோணம் நெடுஞ்சாலை வீராணம் ஏரி விஎன்எஸ்எஸ் மதகு பாலத்தின் கீழ் சுமாா் 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் பலத்த காயங்களுடன் பைக்குடன் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் சனிக்கிழமை காலை சேத்தியாதோப்பு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டதில், பாலத்தின் கட்டையில் பைக் மோதி சுமாா் 30 அடி பள்ளத்தில் விழுந்து அந்த இளைஞா் இறந்தது தெரியவந்தது.

மேலும், இவா் ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த ராஜேந்திரபட்டினம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளியான அன்பு செல்வன் (35) என்பதும், சிதம்பரம் அண்ணாமலைநகா் திருவக்குளம் பகுதியில் தனது மாமியாா் வீட்டிலுள்ள மனைவி வள்ளி மற்றும் இரண்டு மகன்களை பாா்த்துவிட்டு வெள்ளிக்கிழமை நள்ளிரவு 10 மணிக்கு மேல் பைக்கில் ராஜேந்திரபட்டினம் திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து, சேத்தியாத்தோப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்ற உடல்கூராய்வுக்காக சிதம்பரம் காமராஜா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.