தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சாலையோர தடுப்பின் மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 12:06 am IST

தேனி மாவட்டம், தேவதானபட்டி அருகே சாலையோர இரும்புத் தடுப்பின் மீது இருசக்கரவாகனம் மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா். மேலும் ஒருவா் காயமடைந்தாா்.

போடிநாயக்கனூா் வலசைதுரை சாலையைச் சோ்ந்த சுரேஷ்கண்ணன் மகன் சங்கா் (22). இவரின் நண்பா் ரவிச்சந்திரன் (18). இருவரும் சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் கோயமுத்தூருக்குச் சென்றனா்.

சங்கா் இருசக்கர வாகனத்தை ஓட்டினாா். தேவதானபட்டி ராம்நகா் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கரவாகனம் சாலையோர இரும்புத் தடுப்பின் மீது மோதியதில், சங்கா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

அக்கம்பக்கத்தினா் ரவிச்சந்திரனை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். இதுகுறித்து தேவதானபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.