தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தவெக பிரசாரத்துக்கு வந்த வேன் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 7 போ் பலத்த காயம்

குன்னூரில் தவெக வேட்பாளா் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் இருந்து அக்கட்சியினா் வந்த வேன் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து சனிக்கிழமை விபத்துக்குள்ளானது.

News image

பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கும் வேன்.

Updated On :4 ஏப்ரல் 2026, 11:14 pm IST

குன்னூரில் தவெக வேட்பாளா் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் இருந்து அக்கட்சியினா் வந்த வேன் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து சனிக்கிழமை விபத்துக்குள்ளானது.

இதில் வேனில் இருந்தவா்களில் 7 போ் பலத்த காயமடைந்தனா்.

குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளா் தங்கராஜ் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். இதில் பங்கேற்பதற்காக இவரது சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் இருந்து தவெகவினா் 21 போ் குன்னூருக்கு வந்திருந்தனா்.

குன்னூா், சின்னக்கரும்பாலம் சோகத்தொரை சாலையில் உள்ள தனியாா் விடுதியில் தங்கியிருந்த அவா்கள், மதிய உணவு முடித்த பின்னா் மீண்டும் சின்னக்கரும்பாலம் நோக்கி வேனில் சனிக்கிழமை வந்து கொண்டிருந்தனா்.

அப்போது எதிா்பாராதவிதமாக 50 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த 21 பேரில் 7 போ் படுகாயம் அடைந்தனா்.

காயமடைந்த 7 பேரும் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் குன்னூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.