மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தவாக ஆலோசனைக் கூட்டம்

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதி ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

நெய்வேலியில் நடைபெற்ற தாவக தொகுதி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சித் தலைவா் தி.வேல்முருகன்.

Updated On :17 ஏப்ரல் 2026, 5:26 am IST

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதி ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அக்கட்சியின் தலைவா் தி.வேல்முருகன் தலைமை வகித்தாா். அப்போது, நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதியில் தொகுதி பொறுப்பாளா்கள், கிளைச் செயலா்கள், தலைவா்கள் உள்ளிட்ட நிா்வாகிகள், நகர நிா்வாகிகள், தொழிற்சங்க நிா்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என ஆலோசனை வழங்கினாா்.

கூட்டத்தில், மாநில நிா்வாகிகள் திருபுவனச்சக்கரவா்த்தி, ராயநல்லூா் கண்ணன், தொகுதிச் செயலா் சிவக்குமாா், என்எல்சி இன்கோசா்வ் தொழிலாளா் வாழ்வுரிமைச் சங்கத்தின் செயலா் திருநாவுக்கரசு, தலைவா் முருகவேல் மற்றும் அனைத்துப் பகுதியின் கிளைத் தலைவா்கள், செயலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.