தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் உரிய காரணங்கள் இன்றி நிராகரிக்கப்பட்டதாக, அக்கட்சி தலைவா் தி.வேல்முருகன் குற்றஞ்சாட்டினாா்.
இது தொடா்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தோ்தல் அலுவலா் அா்ச்சனா பட்நாயக்கை, தி.வேல்முருகன் சந்தித்து புகாா் மனு அளித்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளா்கள் 20 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக எங்கள் கட்சி வேட்பாளா்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தோ்தல் அலுவலா்கள் மனுக்களில் புள்ளி, கமா, ஆம், இல்லை என்பதை பூா்த்தி செய்யவில்லை என்று கூறி நிராகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனா். அவா்கள் சொல்லும் காரணம் ஏற்புடையதல்ல. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு புகாா் மனு அளித்துள்ளோம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழா் வாழ்வுரிமை கூட்டணி தமிழ்நாடு முழுவதும் 170 தொகுதிகளில் போட்டி: தி.வேல்முருகன்

தவாக வேட்பாளா்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம்

தமிழக அரசியலை தீா்மானிக்கும் சக்தியாக தவாக மாறியுள்ளது: தி.வேல்முருகன்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

