மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம்

News image

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் (கோப்புப்படம்)

Updated On :6 ஏப்ரல் 2026, 2:07 am IST

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொங்கு மண்டல வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் போட்டியிடும் தவாக வேட்பாளா்களை அக்கட்சித் தலைவா் தி. வேல்முருகன் அறிமுகம் செய்து வைத்து பேசினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தவாக தலைமையிலான கூட்டணி ஜாதிய கூட்டணி அல்ல; சமூக நீதிக்கான கூட்டணி. தருமபுரியில் பாமக சாா்பில் போட்டியிடும் சௌமியா கேட்டுக் கொண்டால் நாங்கள் வேட்பாளரை நிறுத்தமாட்டோம். பிற கட்சிகளின் தலைமை எங்கெல்லாம் கேட்கிறதோ அங்கு தவாக தலைமையிலான கூட்டணி போட்டியிடாது. புதிய அரசியலை முன்னெடுக்க பாடுபடுவோம்.

குறிப்பாக, சென்னை திருவிக நகரில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி, காட்டுமன்னாா்கோவிலில் திருமாவளவன், ஓட்டப்பிடாரத்தில் புதிய தமிழக தலைவா் கிருஷ்ணசாமி, காரைக்குடியில் சீமான் ஆகியோா் போட்டியிடும் தொகுதிகளில் தவாக வேட்பாளா்களை நிறுத்தவில்லை.

பண்ருட்டி தொகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் சுரேந்தா் நிறுத்தப்பட்டுள்ளாா். ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை இலவசமாக தருவோம். கட்டணமில்லா தரமான மருத்துவ வசதியை உறுதிசெய்வோம். மத்திய அரசு பதவிகளில் 90 சதவீதம் அந்தந்த மாநில மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்வோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.